அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்களை நிரப்புவதற்கான தேர்வு தேதி அக்டோபர் 28,29 மற்றும் 30 தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.
இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலி பணியிடங்களுக்கு பணி தெரிவு சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை 27 ஆம் தேதி நவம்பர் 2019 ஆம் ஆண்டு வெளியிட்டது. இணையவழி வாயிலாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தினை 22ஆம் தேதி ஜனவரி 2020 முதல் பதிவேற்றம் செய்திடலாம் என அறிவித்தது. மேலும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய 12ஆம் தேதி பிப்ரவரி 2020ஆம் ஆண்டு மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அதில் கணினி வழி தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.
இந்த நிலையில் 1098 அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்களை நிரப்புவதற்கான தேர்வு தேதி அக்டோபர் 28 ,29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிகளில் பெரும் தொற்று சூழ்நிலை, தேர்வு மையங்களின் தயார்நிலை மற்றும் நிர்வாக வசதியைப் பொருத்து மாறுதலுக்கு உட்பட்டது எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.